• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்த உக்ரைன்

ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக கிரீமியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளமை ரஷ்யாவை சினம் கொள்ளவைத்துள்ளது. உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா பகுதியை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. கிரீமியாவில் உள்ள பாலமானது இரு நாடுகளையும் இணைப்பதால் தற்போது நடைபெறும் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  
இதனால் அந்த பாலம் மீது உக்ரைன் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் கிரீமியாவில் உள்ள பாலத்தை குறிவைத்து கடந்த வாரம் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் ரஷிய ராணுவத்தினர் அதனை முறியடித்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியா குற்றம் சுமத்தியது. எனினும் உக்ரைன் தரப்பில் எவ்வித தகவலும் அளிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக கிரீமியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார் . இதனால் உக்ரைனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷிய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply