• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

இலங்கை

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் முல்லேரியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளதாக மாங்குள பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின் பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கிப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply