• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

இலங்கை

அனைத்து மாவட்டங்களினதும் உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுடன் இடம்பெறும் முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

தேர்தல்களை எதிர்கொள்ளும் விதம் மற்றும் ஆணைக்குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply