• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை - அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை

யாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய  தினம் தந்தையை இழந்த இந்துக்கள்  அவர்களது  நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் மரக்கறிகள் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு கிலோ காத்தோட்டியம் காய் 3,200 ரூபாய்க்கும், பாகற்காய் 800 ரூபாய்க்கும், பயற்றங்காய் 400 ரூபாய்க்கும், மிளகாய் 550 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 350 ரூபாய்க்கும், பயற்றங்காய் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply