• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த  நிலையில்  யானை ஒன்று  அப்பகுதி  மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும்  8 அடி அகலமும் கொண்ட  15-20 வரையிலான வயதினைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யானையின் பின் வலக்கால் கண்ணிவெடி தாக்குதலில் சிதைவடைந்து காணப்படுவதாகவும்   யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளை இடம்பெறும் எனவும்  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply