• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உயர்ஸதானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவரின் அழைப்பிற்கு அமைய குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருடத்துக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த விஜயத்தில் கருத்திற்கொள்ளப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் அதிகார பகிர்வு. 13ம் திருத்தம், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply