• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாரும் ராயல்டி உரிமை கோரமுடியாது - திருமண விழாக்களில் சினிமா பாடல்கள் பாடலாம்

சினிமா

திருமண விழா உள்ளிட்ட கொண்டாட்டங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் சினிமா பட பாடல்கள் இசைக்கப்படுவதும், பாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

சினிமா பாடல்கள் அங்கீகரிக்காமல் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த பதிப்புரிமை சங்கம் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. அது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த அருள் ஜார்ஜை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் தனது அறிக்கையில் திருமண விழாக்களில் பாடல்கள் காப்புரிமை மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருமண விழா கொண்டாட்டங்களில் திரைப்பட பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் சட்ட தடை இல்லை என்று மத்திய வர்த்தக துறை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பதிப்புரிமை பெற்ற பாடல்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் இந்திய பதிப்புரிமை சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டத்தில் உள்ள 52(1)-இசட் ஏ பிரிவின் கீழ் மத நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்வுகளுககு முன் அனுமதி மற்றும் ராயல்டி தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளில் திரைப்படபாடல்கள் பாடுவதற்கும், ஒலிப்பதிவுகளை கேட்பதற்கும் தடை இல்லை என்பது மட்டுமின்றி, யாரும் ராயல்டி கோரமுடியாது என்பதை மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கி இருக்கிறது.

Leave a Reply