• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழப்பு

இலங்கை

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்  காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச்  சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி என்ற 27 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மூன்று நாட்களாகக் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை ) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply