• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்டியில் காலாவதியான சொக்லெட்டுக்கள் விற்பனை

இலங்கை

கண்டியில் உள்ள முன்னணி வர்த்தக ஸ்தாபனமொன்றில் மாநகர சுகாதார திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது காலாவதியான டொப்பிகள் மற்றும் சொக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பக்கெட்டுகளில் காலாவதி திகதியை மாற்றி இந்த இனிப்புகளை வணிக நிறுவன நிர்வாகம் விற்பனை செய்து வருவதாகவும், தயாரிக்கப்பட்ட திகதி அல்லது உற்பத்தி நாடு பக்கெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை என்றும் தலைமை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வணிக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply