• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Online கடவுச்சீட்டுக் குறித்து வௌியான அதிரடித் தகவல்

இலங்கை

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக்  கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஜூன் மாதம்  15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் கடவுச் சீட்டுக்கு  விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர்களில் 5,294 பேர் ஒரு நாள் சேவைக்கும், 24,285 பேர் பொது சேவைக்கும் விண்ணப்பித்துள்ளனர் எனவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த முறைமை அமுல்படுத்தப்பட்டமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக காணப்படும் நீண்ட வரிசைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply