ஒரு வயது குழந்தைக்கு எமனான போத்தல் மூடி
இலங்கை
அக்குரஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்தது.
நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு வயதும் 15 நாட்களுமேயான குழந்தையொன்றே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அவரது சகோதரர் மூடியை அகற்ற முற்பட்ட போதும் அது பலனளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.