• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு - இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது

இலங்கை

51 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ எனப்படும் கஞ்சா மற்றும் ஹஷிஷை இலங்கைக்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் இரண்டு தாய்லாந்து நாட்டினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

23 மற்றும் 39 வயதுடைய அந்த சந்தேக நபர்கள், தாய்லாந்தில் உள்ள ஒரு இறைச்சிச் சந்தையில் பணிபுரியும் கசாப்புக் கடைக்காரர்கள் என்று கூறப்படுகிறது. 

அவர்கள் பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் நள்ளிரவில் இலங்கை வந்தடைந்தனர். 

அவர்களுடைய பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டபோது, சூசுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.496 கிலோகிராம் ‘குஷ்’ கஞ்சாவையும், 641 கிராம் ஹஷிஷையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.51,370,000 மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும், சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply