பிரான்ஸ் ஜனாதிபதியின் பரபரப்பு தகவல் - முற்று பெறும் அரசியல் வாழ்க்கை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மெக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மெக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2022-ம் ஆண்டு, அவர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
பிரான்சைப் பொறுத்தவரை, அரசியல் சாசனத்தின்படி ஒரு நபர் மூன்றாவது முறை ஜனாதிபதியாக முடியாது.
ஆகவே, அடுத்த தேர்தலில் மெக்ரோன் போட்டியிட முடியாது. இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சைப்ரஸ் தீவுக்கு சென்றுள்ள மெக்ரோன், சைப்ரஸின் தலைநகரான நிகோசியாவில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை. என் பதவிக்காலம் முடிந்த பின்பும் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடிவடைந்தபின், மேக்ரான் அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதை உறுதிப்படுத்தினார்.






















