மத்திய கிழக்கு போர் பதற்றம் - சவுதியில் இருந்து வெளியேறிய ரொனால்டோ
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-நசார் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனி விமானத்தில் ரொனால்டோ வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ , பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,தனது குடும்பத்தினருடன் சொந்த விமானத்தில் சவுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















