இலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி
இலங்கை
இலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை ஈகில்ஸ் விங் கொல்ப் விளையாட்டரங்கில் கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்று இன்றைய தினம் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த போட்டியில் உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த போட்டிகள் இன்றைய தினம் மாலை வரை நடாத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதுடன் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மாலை பரிசளிப்பு வைபவம் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.























