யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு
இலங்கை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் நேற்றைய தினம் (25) இரவு 10 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது .
புலனாய்வு துறையினருக்கும் கடற்படையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மருதங்கேணி பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வத்திராயன் பகுதியில் வைத்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இச் சுற்றி வளைப்பில் சந்தேக நபர் ஒருவரும் 34 பொதிகள் அடங்கிய 60.256 kg கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்ற பட்ட போதைப்பொருளினையும் சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.























