இலங்கை அரசாங்கம் மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு
இலங்கை
மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.
ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொடர்புடைய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் கூறினார்.






















