ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை - மக்கள் வெளியேற்றம்
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது.
தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலைப் பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செய்யப்படத் தொடங்கியது குறிப்பிடத்க்கது.





















