• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துமிந்த திசாநாயக்கவுக்கு கடும் நிபந்தனைகளின் கீழ் பிணை

இலங்கை

கொழும்பு, ஹேவ்லொக் டவுனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, முன்னாள் அமைச்சர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

ஆயுதம் வைத்திருந்ததாக 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டன.

அதன் பிறகு முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply