• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். ஒட்டகப்புலத்தில் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

இலங்கை

யாழ்ப்பாணம்,தெல்லிப்பளை -ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன.

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் குறித்த பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலை அடுத்தே ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

பொன்னாலை- பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும் வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply