• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் மருத்துவ சத்திர சிகிச்சை விடுதி திறப்பு

இலங்கை

126 வருடம் பழமை வாய்ந்த இணுவில் மக்லியோட் வைத்தியசாலையில் புகழ்பெற்ற மகப்பேற்று வைத்தியரான கெங்கம்மாவின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, மருத்துவ சத்திர சிகிச்சை விடுதி இன்று திறந்தது வைக்கப்பட்டது.

சிறுவர்கள், குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் சயந்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இந்தக் கட்டிட தொகுதியானது வைத்திய நிபுணர் சயந்தன் மற்றும் அவரது பாரியார் கிருபாளினியின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், சத்திரசிகிச்சை பேராசிரியர் வைத்திய நிபுணர் ரவிராஜ் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக மகப்பேற்று வைத்திய நிபுணர்களான கஜேந்திரன், சரவணபவன், சிவாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply