• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெங்குவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 21 ஆயிரத்து 453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு டெங்கு நுளம்பு பரவும் ஆபத்ததன வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்குப் பின்னர் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply