• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடிவேலு ஒரு காமக்கொடூரன் - பிரபல நடிகர் வெளிப்படை

சினிமா

தமிழ் சினிமாவில் நடித்து, மக்கள் மனங்களில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அவர்களிடம் நல்லவிதமாக சென்று சேர்ந்துவிட்டால், கடைசி வரை அந்த நல்ல பெயரை காப்பாற்ற வேண்டும். நடிப்பால் ரஜினி, கமல் இரண்டு பேருமே மக்கள் மனங்களை வென்றார்கள். ஆனால் இப்போது ரஜினிக்கு உள்ள இடம், கமலுக்கு இல்லாமல் போனது அவரது தனிப்பட்ட வாழ்க்கையும். அவரது மோசமான குணங்களும்தான்.
  
அந்த வரிசையை சேர்ந்தவர்தான் நடிகர் வடிவேலு. துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்த வடிவேலு, ஒரு கட்டத்தில் வடிவேலு காமெடி இருந்தால் படம் பார்க்கலாம் என்று எண்ணும் அளவுக்கு ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகரானார்.

சந்திரமுகி, ஆறு, சச்சின், வேல், தவசி, பகவதி, ரெண்டு, ஆரியா, வின்னர், கிரி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, எம்டன் மகன், திமிரு, கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன், மஜா, ஆதவன், அருள், அரசு, ஐயா என அந்த படங்கள் வந்த காலகட்டத்தில் வடிவேலுக்கு இருந்த இமேஜ் என்பது பலரையும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்தது.

ஏனெனில் அந்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் கெட்டப்பும் நடிப்பும், அடேங்கப்பா என வியப்படையச் செய்யும் அளவுக்கு நடிப்பிலும், காமெடியிலும் பின்னி பெடலெடுத்த இருப்பார்.

ஆனால் அப்படிப்பட்ட வடிவேலுக்கு, நிஜ முகம் வேறாக இருந்திருக்கிறது. அதுவும் மிக கோரமாக இருந்திருக்கிறது. இப்போதுதான் அவரை பற்றிய பல உண்மைகளை, அவருடன் நடித்த துணை நடிகர்களே நேர்காணலில் சொல்லி வருகின்றனர்.

இதுகுறித்து பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது,

பட வாய்ப்புக்காக வந்த பல நடிகைகளை வேட்டையாடி இருக்கிறார் நடிகர் வடிவேலு. இதற்காக தனியாக பண்ணை வீடு வாங்கி வைத்திருந்தார். ஒரு படத்தில் ஒரு நடிகைக்கு ஜோடியாக நடித்து விட்டால் இன்னொரு படத்தில் வேறு ஒரு நடிகையை தேடுவார் வடிவேலு.

பட வாய்ப்பு கொடுப்பதற்காக சில முன்னணி நடிகைகளை கூட வேட்டையாடி இருக்கிறார் வடிவேலு. இவ்வளவு செய்தாலும் கோடி கோடியாய் பணம் சம்பாதித்தாலும் தன் உடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு கொடுக்கும் மனம் இல்லாதவர் வடிவேலு.

அவர் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயாரிப்பாளர்கள் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு எல்லாம் 5,000 10,000 அதோடு நிறுத்துங்கள் லட்சங்களில் எல்லாம் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து பழகிவிடாதீர்கள் என்றும் நேரடியாகவே தடுத்திருக்கிறார்

கொடுப்பது என்றால் என்ன என்றே தெரியாத வடிவேலு, பெண்கள் விஷயத்தில் ஒரு காமக்கொடூரன் ஆக இருந்தார் என பதிவு செய்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

வாய்ப்புக்காக கசக்கி பிழியப்பட்ட நடிகைகள் மிக அதிகம். நடிகர் வடிவேலு ஒரு காமக்கொடூரன் என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஓப்பனாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

Leave a Reply