• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வௌியிட்ட கருத்து தொடர்பில் நாளைய தினம் (25) அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்படவிருந்தது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அது தற்போது நாடு முழுவதும் இது பேசும் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply