• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் இலங்கை மாணவர் மர்ம மரணம்

இலங்கை

பிரித்தானியாவில் வசித்து வந்த ‘டினால் டி அல்விஸ்‘ என்ற 16 வயதான இலங்கை மாணவர்  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டினாலின் மரணம் தற்கொலை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அவரது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுமாறு சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவிலிருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply