• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பில் அரச அதிகாரிகள்

இலங்கை

அரச துறை அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.எல்.ஏ.உதயசிறி தெரிவித்தார்.

நிறைவேற்று சேவை உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று அரச துறையின் அனைத்து நிறைவேற்று உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடொன்று இடம்பெறவுள்ளதாகவும், இதில் ஆயுர்வேதம், மருத்துவம், நில அளவை உள்ளிட்ட  திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply