• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிஞர் வாலிக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர் - காரணம் கண்ணதாசன்?

சினிமா

வாலிப கவிஞர் என்று தனது இறுதி மூச்சுவரை இந்த பெயரை பெற்றிருந்த வாலி போல் என்னால் பாட்டு எழுத முடியவில்லை என்று நடிகர் சிம்பு தனது வல்லவன் படத்தின் பாடல் வரிகளில் சுட்டிக்காட்டி இருப்பார்.

தமிழ் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுக்கு பாட்டு எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி. கண்ணதாசன் தனது கவித்துவமான பாடல்கள் மூலம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டி என்று சொல்வது போல் வந்தவர் தான் வாலி. ஒரு கட்டத்தில் கண்ணதாசன் – எம்.ஜி.ஆர் உறவு சுமோகமாக இல்லாத நிலையில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலி பாடல் எழுத தொடங்கினார்.

அப்படி எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய நான் ஆணையிட்டால், ஏன் என்ற கேள்வி உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. எம்.ஜி.ஆர் மட்டுமல்லாமல், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல க்ளாசிக் நடிகர்கள் தொடங்கி விஜய் அஜித், சிம்பு உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

வாலிப கவிஞர் என்று தனது இறுதி மூச்சுவரை இந்த பெயரை பெற்றிருந்த வாலி போல் என்னால் பாட்டு எழுத முடியவில்லை என்று நடிகர் சிம்பு தனது வல்லவன் படத்தின் பாடல் வரிகளில் சுட்டிக்காட்டி இருப்பார். முன்னணி நடிகர்கள் பலருக்கும் இவர் பாடல் எழுதி இருந்தாலும், தொடக்கத்தில் வாலி எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியதாக பலரும் நினைத்திருக்கிறார்கள்.

மற்றவர்களை விட எம்.ஜி.ஆரே அவ்வாறு நினைத்த சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி, நான் கற்பகம் என்ற படத்தில் 2 பாடல்கள் எழுதியிருந்தேன். இது சத்தியம் என்ற படத்தில் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். ஆனால் ஒரு பாடல் பாக்கி இருந்ததால் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் என்னை சொல்லி அந்த ஒரு பாட்டை எழுத வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

இதற்காக எம்.எஸ்.வி எனது பாடல்கள் சிலவற்றை பாடியும் காட்டியுள்ளார். எனது பாடல்களை கேட்ட தயாரிப்பாளர் இவ்வளவு அழகாக இருக்கிறதே இவர் ஏன் ஒரு பாடல் மட்டும் எழுத வேண்டும் அடுத்து எம்.ஜி.ஆர் நடிப்பில் படகோட்டி படம் எடுக்க போகிறேன். அதில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதட்டுமே என்று கூறியுள்ளார். அப்படித்தான் படகோட்டி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் 2 பாடல்கள் ரெக்கார்டிங் செய்யும் வரை படத்தின் பாடல்களை நான் தான் எழுதுகிறேன் என்று எம்.ஜி.ஆருக்கு தெரியாது. 2 பாடல்களையும் கேட்ட எம்.ஜி.ஆர் யார் கண்ணதாசன் எழுதினாரா என்று கேட்டுள்ளார். அப்போது தயாரிப்பாளர் என்னை பற்றி கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அந்த பாடல்களை மீண்டும் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் இனி என் படத்திற்கு வாலி தான் பாடல் எழுதுவார் என்று அறிவித்தார் என வாலி குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply