• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் வடக்கு புகையிரத பாதையில் இன்று (18) உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதி கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புகையிரதம் வருவதை அறியாமல் புகையிரத பாதையில் பயணித்த போது அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a Reply