• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை- வெளியான அதிரடித் தகவல்

இலங்கை

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 5 ஆவது சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டு 10 நாட்களைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply