• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுதந்திரக்கட்சி விவகாரம் – விஜயதாசவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்

இலங்கை

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை இன்றி நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு தடை உத்தரவு பிற்பிபத்திருந்தது.

இந்த தடையுத்தரவை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு விசாரணை இன்றி நிராகரிக்கப்படப்டுள்ளது.

அதன்படி விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply