• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எங்கடா போய்ட்டு வர

சினிமா

நடிகர் பிரபுவின் முதல் படம் சங்கிலி, இந்த படத்தின் படபிடிப்பிற்காக புறப்பட தயாரானார்கள் இவரது தந்தையான நடிகர் சிவாஜி கணேசனும், பிரபுவும், அப்பாவிடம் பிரபு "நீங்க ஸ்டுடியோவிற்கு செல்லுங்கள் சிறிதுநேரம் கழித்து நான் வருகிறேன் "என்றார்  அதற்கு சிவாஜி "டேய்..நீயும் நானும் நடிக்க வேண்டிய காட்சியை இன்று படமாக்குகிறார்கள்..நீ..எப்போ வருவே " என்றார், "நீங்க போறதுக்குள்ளே வந்துடுவேன் ..போங்கப்பா.." என்று சொன்னார் பிரபு, "சரி சீக்கிரமாக வா " என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சிவாஜி . 

சிவாஜி ஸ்டூடியோவுக்கு வந்த பின் சிறிது நேரம் கழித்து பிரபு வந்தார் , சிவாஜி கேட்டார்  "எங்கடா போய்ட்டு வர. "

 "அது ஒன்னும் இல்லப்பா நான் சினிமாவில் முதன்முதலாக நடிக்க போறேன் , ராமாபுரம் தோட்டத்துக்கு போய் பெரியப்பாவிடம் (எம்ஜிஆர்)  ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன்  " என்றாராம் பிரபு.

Chandran Veerasamy

Leave a Reply