• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனையில் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

இலங்கை

கல்முனையிலுள்ள  சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் ஆலயமொன்றிலிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் கடந்த 16 ஆம் திகதி கொக்குவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுவனை  சிறுவர் நன்னடத்தை நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுவன் உயிரிழந்ததாக நன்னடத்தை நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,  கடந்த 29 ஆம் திகதி பெண் பராமரிப்பாளர் ஒருவர் குறித்த சிறுவனைத் தாக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

அத்துடன் சிறுவனின் நெஞ்சுப் பகுதியில் தாக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில்  தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் கல்முனைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply