• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள்

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30.11.2023) சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக 3 பேர் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரத்தின் படி காலை 10 மணியளவில் இலங்கைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இருவர் உள்ளடங்களாக மூவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2015ஆம் ஆண்டளவில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரப்பட்ட நிலையில் அவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 

Leave a Reply