அதிபர் தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு - டலஸ் அணியில் வெடித்தது பிளவு
இலங்கை
எதிர்வரும் அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் ஒரு சிலரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் அந்த குழுவின் ஒரு குழு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதுடன் மற்றைய குழுவினர் மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.