• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

இலங்கை

இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, இந்த ஆண்டில் இன்று வரையான காலப்பகுதியில் 76,086 பேர் டெங்கு நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு 16,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில், 35,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் அவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்கள் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply