• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உட்பட 3பேர் கைது

இலங்கை

மட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும்  அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவீரர் தினமான நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ”தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிப்பதற்கான மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் கொடிகளை ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு  சிவப்பு, மஞ்சள் நிறக்  கொடிகள் மற்றும் கம்பிகள் இருப்பதை கண்டு வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்குக்  கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்), அவரது மகன் உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட சாரதியை பார்த்துவிட்டு பி.ப  6.5 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள  வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் கைது செய்த பொலிஸார்  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply