• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டயானா கமகே விவகாரம்- நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு இன்று கூடுகின்றது

இலங்கை

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய இக்குழு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு கூடுகின்றது.

இந்த முறைப்பாடுகளுக்கு இந்த வாரம் விசேட முன்னுரிமையுடன் விசாரிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு சமிந்த விஜேசிறி விடுத்த அச்சுறுத்தல் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.

மேலும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்குகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
 

Leave a Reply