• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இரு தமிழர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

கனடா

கனடாவில்(Canada) முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக இரு தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், Ajax நகரை சேர்ந்த 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
 

Leave a Reply