• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும் - இஸ்ரேல்

காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம்.

இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும்.

கூடுதல் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27-ந்தேதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது" என்றார்.
 

Leave a Reply