• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் 

இலங்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகரப் பகுதி, முனிஸ்வரன் கோயில் வீதி, முற்றவெளிப் பகுதி அங்காடிக்கடைத் தொகுதிகளில் மக்கள் கூட்டம் பெருக்கெடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையிக்கு மத்தியில் உடைகளின் விலைகள் கடுமையாக ஆங்கரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தற்போதைய விலைவாசி காரணமாக தீபாவளியை மகிழ்ச்சியாகக கொண்டாட முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 

Leave a Reply