புதிய இணையத்தள சேவை....
இலங்கை
உலகப் புகழ் பெற்ற தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேயைினை,
இன்று ஆரம்பித்து வைத்தார் தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்கள்.
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானம் என்பது தனித்து ஒரு வழிபாட்டு ஆலயமாக இல்லாமல் பல்வேறு சமூக நலத்திட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு சிறந்த சமூக நலன்சார்ந்த நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது.
இவ் தேவஸ்தானத்தின் பெருமைகள் மற்றும் தேவஸ்தானத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்ட செயற்பாடுகள் தொடர்பில் உலகில் உள்ள சகல இன, மத, மொழி மக்களும் மிக இலகுவில் அறிந்து கொள்ளும் நோக்கில்,
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்திற்குரிய புதிய இணையத்தள சேயைினை செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உலகம் எங்கும் பரந்து வாழும் அன்னையின் அடியவர்கள் மிக இலகுவில் அன்னையின் பெருமைகள் மற்றும் அன்னையின் பெயரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மிக இலகுவில் அறிந்து கொள்ள முடியும்.
மிகவும் கண்கவர் வகையில் உருவாக்கப்பட்ட இவ் இணையத்தளத்தின் முழுமையான வடிமைப்பினையும் தகவல்களையும் பார்ப்பதற்கு கணனியில் இருந்து,
https://www.Tellidurga.com என்ற முகவரிக்கு சென்று பார்க்க முடியும்.