• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 50 கிலோகிராம் கஞ்சா சிக்கியது

இலங்கை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோகிராமிற்கும் அதிகமான கேரளா கஞ்சாப் பொதிகளை  நேற்றிரவு (29) பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கஞ்சாப் பொதிகள்  மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply