படையப்பா படத்தால் என் பெயரே மாறிடுச்சு- நடிகர் அனு மோகன் பேட்டி
சினிமா
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகர் என சினிமாவில் பல விஷயங்களை செய்து பாப்புலரானவர் அனு மோகன். அவர் மின்சார கண்ணா படத்தில் 'நீங்கதானே புறாவுக்கு பெல் அடிச்சது' என விஜய்யை பார்த்து கூறும் வசனம் மிக பேமஸ்.
கேரளாவுக்கு போனால் ரசிகர்கள் என்னை 'புறா' என்றே அப்போது கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனு மோகன் கூறி இருக்கிறார்.
படையப்பா படத்திற்கு பின் என்னை பார்த்தால் பலரும் 'நீங்க தானே அந்த பாம்பு புத்து' என கேட்பார்கள். என் வீட்டிலேயே என்னை 'பாம்பு' என கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.