• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட  ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்  வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து  உடமைகளைத் திருடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், இதுவரை 5 துவிச்சக்கர வண்டிகளை குறித்த கும்பல் திருடிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த ஐவரையும் கைது செய்த பொலிஸார், நேற்றைய தினம் அவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அதில்  நால்வர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நால்வரையும் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Reply