• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

இலங்கை

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவிக்கின்றது.

ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் வைக்கோல், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டி, கத்திகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்தல், விற்பனை, இலவச சலுகை அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply