• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்தரங்க புகைப்படத்தை குடும்ப பெண்ணிற்கு அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் கைது

இலங்கை

சாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

தையல் இயந்திரம் உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த நபர் நீண்ட காலமாக தனது கைத்தொலைபேசிக்கு அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வருவதாகப்  பாதிக்கப்பட்ட பெண் சாய்ந்தமருதுபொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இக் கைதுநடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளைக்  கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸாரின்  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை இன்றைய தினம் (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply