• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹலிய ரம்புக்வெல்ல கைது

இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார்.

விசாரணை தொடர்பான வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (18) ஆணையத்தின் முன் ஆஜரான போதே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக ஆறு ஊழியர்களை நியமித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 

Leave a Reply