• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது

இலங்கை

நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளர் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சந்தேகநபரான நாய் உரிமையாளரை 2026.06.10 அன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேளையில், அந்த நாய்களின் வாய்கள் நூல் போன்ற ஒன்றால் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பொலிஸ் அதிகாரிகள் நாய்களை பாதுகாப்பாக தங்களது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

தற்போது அந்த நாய்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

67 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply