நானுஓயாவில் மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் கடந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.
பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
நானுஓயா பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி மற்றும் அவரது பொலிஸ் துறை அதிகாரிகள், நானுஓயா பகுதி மக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் இதன் போதோ இவ்வாறான புகார்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்
இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.






















