• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம் இதயதெய்வம் முதல்வர் ஆக இருந்த சமயத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

சினிமா

நம் இதயதெய்வம் முதல்வர் ஆக இருந்த சமயத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

அங்கே அப்போது தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆன தலைவருக்கு முன்பே அறிமுகம் ஆன ஒரு இன்னிசை குழுவினர் கச்சேரி நடந்து கொண்டு இருக்கிறது.
மாலை 6.30..மணி அளவில் அங்கே வந்த தலைவர் குழுவினர் இசை நிகழ்ச்சியை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்து கொண்டு இருக்கிறார்.
இரவு 8.30 மணி அளவில் முதல்வர் கண் அசைவில் ஒரு குறிப்பு நோட்டு வர அதில் ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி முடித்து....
அந்த பாடல் முடிந்தவுடன் மேடை ஏறி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டு இருந்த அந்த பிரபலம் அவரை கட்டி பிடித்து அவரின் கோட் பாக்கெட்டில் தான் எழுதிய பேப்பர் குறிப்பை மடக்கி உள்ளே வைத்து கும்பிட்டு புறப்படுகிறார்.
இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற அனைவரும் என்ன முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உங்களுக்கு குறிப்பு தந்தார் என்று அவரை குடைந்து கேள்விகள் எழுப்ப.
நானே இன்னும் படிக்கவில்லை என்று பதில் அளிக்க வீட்டுக்கு வந்து அதை படிக்கும் போது அதில்.
தம்பி என்னை மன்னித்து கொள்ளுங்கள்..உங்கள் இசை மழையில் இருந்து பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது...
எனது இளமை கால நண்பர் கே.ஏ. தங்கவேலு நடிகர் அவர்கள் மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் விடை பெறுகிறேன் உங்கள் இடம் இருந்து.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வந்து எப்பவும் சந்திக்கலாம் என்று எழுதி இருந்த குறிப்பை படித்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறார் அந்த நபர்...

4 முறைக்கு மேலாக அவரின் இன்னிசை நிகழ்வை முழுவதும் இருந்த ரசித்த தலைவர் அவரை தன் கட்சியில் சேர சொல்லி அழைத்தும் அந்த வாய்ப்பை தவற விட்ட அவர்..
தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து தலைவர் வீட்டுக்கு சென்று தன் 8 வயது மகன்...மனைவி உடன் பார்க்க சென்ற போதும் தலைவர் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று என்னை நீங்கள் சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை...
பரவாயில்லை...உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி வழக்கம் போல தலைவர் பாணியில் வழி அனுப்பி வைக்கிறார்.
இசை தம்பதியர் இருவரும் அழ ஆரம்பிக்க எட்டு வயது மகன் ஏன்பா அழுகுறீர்கள் என்று அவனும் கண்ணீர் விட துவங்க....
என்ன ஒரு பெருந்தன்மை..நம் இதய தெய்வத்துக்கு என்று எண்ணிய படி கலங்கிய கண்கள் உடன் வீடு நோக்கி திரும்ப தன் காரை நோக்கி நடந்த அந்த.
அவர் பிரபல பாடகர் ஏ.வி ரமணன்...மற்றும் அவர் மனைவி உமா ரமணன் மற்றும் அவர் மகன் விக்னேஷ் ரமணன் ஆவர்.
எல்லோர் இடத்திலும் ஒரே மாதிரி பழக நம் தங்கதலைவர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதற்க்கு இது போல சான்றுகள் என்றும் தொடரும்.
உங்களில் ஒருவன்.
நன்றி..பதிவின் படத்தில் தலைவர் அருகில் அவர்கள் படம் உள்ளது...நன்றி..
 

 

Leave a Reply